Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மீனவர்கள் 5 பேர் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகு ஒன்றையும் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி படகுடன் 5 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

5 Fisher men arrested by Sri Lanka Navy

அவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த 5 மீனவர்களும் பிற்பகலுக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அதன் பின்னர்தான், மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா அல்லது விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.

ஏற்கனவே, இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்திருப்பது தமிழக மீனவர்களிடையே வேதனையை அதிகரித்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+