அருப்புக்கோட்டையில் சோகம்... கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விடுமுறை தின்மான இன்று போத்தம்பட்டி கண்மாய்க்கு சில சிறுமிகள் சென்றனர். நீரில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, 8 வயது ரம்யா, 8 வயது பொன்மணி, 11 வயது ரம்யா, 13 வயது காமாட்சி, 13 வயது மாதரசி ஆகியோர் நீரில் மூழ்கி விட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவியர் உடனே ஊருக்குள் ஓடி குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் ஊரே திரண்டு கண்மாய்க்கு ஓடியது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தும் கூட ஐந்து மாணவியரையும் உயிரோடு மீட்க முடியவில்லை. உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications