5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர ஐ.ஜி ஆனார் தாமரைக்கண்ணன்
சென்னை: தமிழகத்தில் உள்ள 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னா மாநகர ஐ.ஜி.யாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகர காவல் (நிர்வாகம்) ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி கடந்த 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை மாநகர காவல் (நிர்வாகம்) ஐ.ஜி.யாக பி.தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக ஆபாஷ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அமல்ராஜ், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் டி.ஐ.ஜி.யாக இருந்த சஞ்சய் குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உதவி கண்காணிப்பாளராக நிஷா சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications