தமிழகத்தில் உயர் நிலைப் பள்ளிகளான 50 நடுநிலைப் பள்ளிகள்
சென்னை: தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய ஆசிரியர் பணியிடம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் பள்ளிகளை தரம் உயர்த்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 760 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தாண்டு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான ஆணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ளார். தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளியிலும் தலா ஒரு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம், தலா 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 50 உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமும், 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை வருமாறு,
காஞ்சிபுரம் மாட்டத்தில் 4 பள்ளிகளும், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகப்பட்டிணம், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 1 பள்ளியும், வேலூர் மாவட்டத்தில் 7 பள்ளிகளும், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் தலா 1 பள்ளியும் தரம் உயர்த்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேலநீலிதநல்லூர் ஒன்றியம், பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications