For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் துணிகரம்.. 2 வீடுகளின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை!

2 வீடுகளின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    2 வீடுகளின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை!-வீடியோ

    கோவை: கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டம சூலூரில் நேற்று ஒரே நாளில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைந்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சூலூர் விமானப்படைத் தளத்தின் பின்புறம் உள்ள காடம்பாடி பிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் 45. இவர் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் தனது மனைவி சிலம்புச்செல்வி மற்றும் மகனுடன் சனிக்கிழமையன்று தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றிருந்தார்.

    53 Sovereign Jewelry Theft In Kovai

    நேற்று காலை ஊரிலிருந்து நேராக வங்கிக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு முன்பக்கமாக உடைந்து திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ.80,000 பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    அதேபோல சூலூர் காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள பி.கே.டி.நகரில் வசித்து வருபவர் வெங்கட்ராமன், தனியார் நர்சிங் கல்லூரி பேராசிரியர் இவரும் இவரது வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது இவரது வீடும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த 23 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

    இந்த இரட்டை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாகவும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சூலூரில் ஒரே நாளில் இரண்டு வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    53 pounds of jewelery have been looted 3 kg silver and Rs 80,000 in cash in Kovai. Two suspects have been lodged at Sulur police station and handguns are being tested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X