குரூப் 2 தேர்வு... கேள்வியெல்லாம் ரொம்ப ஈஸி.. பரீட்சை எழுதியவர்கள் உற்சாகம்

கேட்கப்பட்ட கேள்விகள் ஈஸியாக இருந்ததாக பரீட்சை எழுதியவர்கள் கூறியுள்ளனர்.
கால் காசு ஆனாலும் கவர்ன்மென்ட் காசு என்பது சொலவடை. அந்த வகையில் அரசு வேலை மீதான மோகம் இப்போதும் கூட சற்றும் குறைந்தபாடில்லை. எனவே எப்போது அரசுப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்பட்ட இடத்தைப் போல பல மடங்கு பேர் தேர்வு எழுத குவிகின்றனர்.
அந்த வகையில் வணிகவரி துணை ஆணையாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.
மொத்தம் 1064 பணியிடங்களுக்கு இன்றைய தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பேர் எழுதினர். இதற்காக, 114 நகரங்களில் 2 ஆயிரத்து 269 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கேள்விகள் ஈஸியாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 79 ஆயிரத்து 550 பேர் தேர்வுக்காக 10 மணிக்குத் தேர்வு தொடங்கி 1 மணி வரை நடந்தது. மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதிலளித்தனர் தேர்வு எழுதியவர்கள்.
இன்றைய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பிரதானத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர். அதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications