மதுரை நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இன்று காலையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது திண்டுக்கல்லில் இருந்து வந்த சரக்கு லாரி மோதியது. பெருமாள்கோவில்பட்டி பிரிவு என்ற இடத்தில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 Die in road accident On Madurai Dindigul Highway

இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சரக்கு லாரி அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+