அடுத்தடுத்து 6 வீடுகளில் திருட்டுப் பசங்க அட்டகாசம்.. தூத்துக்குடி மக்கள் டென்ஷன்
தூத்துக்குடி: தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் 6வீடுகளில் தொடர் கொள்ளை நடநதுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி காலனியின் 14வது தெருவில் தொடர்ச்சியாக 6வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. தபால் தந்தி காலனியில் வசித்து வரும் சொர்ணவேல் என்பவர் குடும்பத்துடன் திருவண்ணாமாலை கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சொர்ணவேலின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள சுந்தரம், சாமுவேல்,நயினார் உள்ளிட்ட 6பேர் வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு தங்க நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.ஆள் இல்லாத வீடுகளாக பார்த்து நோட்டம் விட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.
வீட்டின் உரிமையாளர்கள் வந்த பின்னர் தான் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு தெரியவரும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications