60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்த 28 வயது வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் 60 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 28 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சித்தரேவைச் சேர்ந்தவர் கோபநாதன். இவரது மனைவி சரஸ்வதி 60 வயதானவர். கோபநாதன் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. சரஸ்வதி நேற்று முன் தினம் இரவு தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் 28 வயதானவர். விவாகரத்து ஆனவர். அவர் சரஸ்வதி தூங்கிக் கொண்டிருந்த போது சரஸ்வதியின் வீட்டிற்குள் சென்று அவரை பலாத்காரம் செய்தார்.
சரஸ்வதியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிக்கந்தரை தாக்கினர். நிலக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சரஸ்வதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா சிக்கந்தரை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications