ஜப்பான் செல்ல தேர்வான 7 தமிழக மாணவர்கள்!
சென்னை: கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான மாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வாகியுள்ளனர்.
"ஜெனிசிஸ்" என்னும் இந்த திட்டத்தின் கீழ் வருடம்தோறும் பள்ளி மாணவர்கள் இந்தியாவிலிருந்து ஜப்பான் நாட்டிற்குச் செல்வார்கள்.
இது ஒரு குறுகிய கால சுற்றுப்பயணமாக அம்மாணவர்களுக்கு அமையும்.
ஜப்பானில் கல்வி வளர்ச்சி:
கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் 7 பேரும் ஜப்பான் நாட்டில் 10 நாட்கள் தங்கி, அந்த நாட்டின் கலாச்சாரம், விளையாட்டு, கல்வித் திறமைகளை வளர்க்க உதவியாகச் செயல்படுவார்கள்.
மாணவர்கள் தேர்வு:
இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. இந்த விவரங்கள் மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன.
மொத்தம் 7 பேர்:
அதிலிருந்து கீழ்க்கண்ட 7 மாணவர்கள் ஜப்பான் செல்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
படிப்பு மற்றும் விளையாட்டு:
மூன்று பேர் படிப்புக்காகவும், 4 பேர் விளையாட்டுப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு பெற்றவர்கள் விவரம்:
அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த 7 மாணவர்கள் எஸ். பிரபாகரன் , எஸ்.சில்வியா, டி.யோகேஸ்வரி, வி.ரோஹித், ஆர்.ராமகிருஷ்ணன், கே.அருண் வெங்கடேஷ், எம்.காயத்ரி ஆகியோர் ஆவர்.
மாவட்ட வாரியாக தேர்வு:
இவர்கள் சென்னை, சேலம், நாகர்கோவில், ஏற்காடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் தேதி அறிவிப்பு:
இவர்களுடன் மேற்பார்வையாளராக வேலப்பஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஜப்பான் செல்லும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications