சென்னையில் டிஎஸ்பி.,க்கள் மற்றும் உதவி ஆணையர் உள்பட 7 பேர் இடமாற்றம்
சென்னை: சென்னையில் டி.எஸ்.பி.க்கள், உதவி ஆணையர்கள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை மாநகரில் நடைபெற்று வரும் தொடர் கொலைச் சம்பவங்களின் எதிரொலியாக இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 16 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது 5 டிஎஸ்பி.,க்களும், 2 உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, டிஎஸ்பி.,க்கள் ஆனந்தகுமார், தன்ராஜ், கணேஷ், முரளிதரன் உள்ளிட்ட 5 பேரும், உதவி ஆணையர்கள் ரமேஷ்பாபு, குமார் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்படுவதாக, இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இடமாற்ற விவரம்: (முந்தைய பதவி)
கே.ஆனந்த குமார் ( சென்னை குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி) - வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்
என்.குமார் ( துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ) - திருவொற்றியூர் உதவி கமிஷனர்
எஸ்.முரளிதரன் ( சிவகங்கை நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ) - பண்ருட்டி சரக டி.எஸ்.பி.,
எம்.ராமமூர்த்தி ( சென்னை நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி ) - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு டி.எஸ்.பி., சென்னை
எம்.தங்கராஜ் கணேஷ் ( சி.ஐ.டி., சிறப்பு பிரிவு டி.எஸ்.பி, சென்னை ) - பொருளாதார குற்ற பிரிவு டி.எஸ்.பி.,
எஸ்.ரமேஷ் பாபு ( திருச்சி கிரைம் பிராஞ்ச் உதவி கமிஷனர் ) - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு டி.எஸ்.பி., சென்னை
கே.சுப்பிரமணி ( சிறப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., மதுரை ) - நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., திண்டுக்கல்