Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மடியில் அமர வைத்து 7 வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரம்... 40 வயது கூலித் தொழிலாளி கைது

Subscribe to Oneindia Tamil

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 7 வயது சிறுமியை தூக்கி மடி மீது அமர வைத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்ட 40 வயது கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

திருமனூர் வடக்குக் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயி. அவரது, ஏழு வயது மகள், ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 13ம் தேதி காலை 7.45 மணியளவில் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார் அச்சிறுமி.

7 year old girl moletsed by coolie worker

அப்போது அவரது குடும்பத்துக்கு நன்கு அறிமுகமான கூலித்தொழிலாளி அய்யனார் (40) சிறுமி அருகே அமர்ந்து பேச்சுக் கொடுத்தார். பின்னர் சிறுமியை மடி மீது தூக்கி வைத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடமிருந்து விடுபட்ட சிறுமி பின்னர் வீட்டுக்குத் திரும்பி விட்டார். இரவு அடி வயிற்றுக்குக் கீழே வலிப்பதாக அவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார். தாயார் பார்த்து அதிர்ந்து என்ன நடந்தது என்று கேட்டபோது அய்யனாரின் அட்டூழியம் தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோர் போலீஸிலில் புகார் கொடுத்தனர். போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அய்யனாரைக் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+