8ம் தேதி, 8,000 பேர் மெரீனா பீச்சுக்கு போறாங்க - எதுக்கு தெரியுமா?!
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையை வரும் 8 ஆம் தேதி அன்று 8 ஆயிரம் இளைஞர்கள்,மாணவ, மாணவியர்கள் இணைந்து சுத்தப்படுத்த இருக்கிறார்கள்.
பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணந்து 5 ஆவது முறையாக இந்த கடற்பகுதியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த பணி நடைபெற்று வருகின்றது.

தொண்டு நிறுவனங்கள்:
சென்னை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் இப்பணியில் சென்னை டிரெக்கிங் கிளப், பூமி போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஈடுபட உள்ளனர்.

துவக்க விழா:
இந்த சுத்தப்படுத்தும் பணியினை சென்னை மேயர் சைதை துரைசாமி துவங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

மெரீனா டூ அக்கரை:
மெரீனா கடற்கரையில் இருந்து அக்கரை என்ற இடம் வரை, 20 கி.மீ. தூரம் வரை இந்த பணி நடைபெறுகிறது. 8 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

50 டன் குப்பைகள்:
இந்த பணியின்போது 50 டன் குப்பை சேகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 85% சதவீதம் குப்பைகளையாவது அகற்ற வேண்டும்.

கடல்நீர் மாசுபாடு விழிப்புணர்வு:
இந்த முகாமில் ஒரு பகுதியாக சென்னை டைவ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் டெம்பிள் அட்வென்ச்சர்- புதுச்சேரி குழுவினர் இணைந்து பெசன்ட் நகர் பகுதியில், கடலில் மூழ்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உள்ளனர்.கடல்நீர் மாசுபாட்டை தடுக்கும் விழிப்புணர்விற்காக இதில் ஈடுபட உள்ளனர்.

ஏரிகளிலும் அகற்றும் பணி:
கடற்கரையை தவிர மாடம்பாக்கம், தாழம்பூர், நாராயணபுரம், கீழ்க்கட்டளை உட்பட 4 ஏரிகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.இப்பணியினை இந்திய சுற்றுச்சூழல் சமூக நிறுவனம் மேற்பார்வை இட உள்ளது.

பதிவு செய்யும் வழிமுறை:
கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்கிறார்கள்.விருப்பமுள்ளவர்கள் www.bhumi.org.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications