கடலூர் அருகே மரத்தில் கார்மோதி விபத்து- 8 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் அருகே இன்று மரம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 8 இளைஞர்கள் பலியாகினர். படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள புத்திரன்குபத்தில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் சி.என். பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வானமாதேவி அருகே மரம் மீது அவர்கள் சென்ற கார் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 8 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலியான இளைஞர்கள் சேலம் மற்றும் புத்திரன்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications