For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர் அருகே மரத்தில் கார்மோதி விபத்து- 8 இளைஞர்கள் பலி

By Mathi
Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் அருகே இன்று மரம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 8 இளைஞர்கள் பலியாகினர். படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் அருகே உள்ள புத்திரன்குபத்தில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் சி.என். பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

8 die in accident at Cuddalore

அப்போது வானமாதேவி அருகே மரம் மீது அவர்கள் சென்ற கார் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 8 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலியான இளைஞர்கள் சேலம் மற்றும் புத்திரன்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

English summary
Eight youths died when a car collided with Tree on Saturday near Cuddalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X