சிறுமிகள் கடத்தல் மற்றும் விபச்சார வழக்கு – 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் குழந்தைகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் ஐஜியாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
போலீசார் விசாரணை:
இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி புதுவை போலீசாருக்கு காமராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சி.ஐ.டிக்கு மாற்றம்:
ஆனால் அந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கை காமராஜ் சி.ஐ.டி போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
விபச்சாரத்தில் சிறுமிகள்:
அதைத்தொடர்ந்து சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். அப்போது அருள்மேரி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த 5 பேரில் ஒருவர் 16 வயது சிறுமி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
டைரியில் விபரங்கள்:
இதையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் பெயர்விவரம் மற்றும் விபசாரத்திற்கு வந்தவர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் போலீஸ் அதிகாரிகள் சிலரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஆசை வார்த்தையால் மோசம்:
சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமியையும் அந்த கும்பல் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அந்த 14 வயது சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
குழந்தைக்கு தாயான குழந்தை:
விசாரணையில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியை பணத்தாசைக் காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அந்த சிறுமி ஒரு குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
காப்பக்கத்தில் தஞ்சம்:
அந்த 14 வயது சிறுமி மூலம், அவருடன் படித்த மேலும் சில சிறுமிகளையும் அந்த கும்பல் விபசாரத்தில் இறக்கியது. பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
8 பேர் பணியிடை நீக்கம்:
இந்த நிலையில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கில் போலீஸ் ஐ.ஜி பர்வீர் ரஞ்சன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications