Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரத்தில் தலித் சிறுவன் கொலை...தாய்-14 வயது மகள் பலாத்காரம்...வெறியர்களை கைது செய்யுமா போலீஸ்?

விழுப்புரத்தில் தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது தாயையும், 14 வயது சகோதரியையும் மர்ம கும்பல் பலாத்காரம் செய்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சகோதரி, தாயார் படுகாயங்களுடன் மீட்பு!- வீடியோ

    விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலத் தகராறு காரணமாக குறிப்பிட்ட சமூகத்தினர் தலித் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை அடித்து கொன்றனர். பின்னர் அவரது தாயையும் 14 வயது சகோதரியையும் சரமாரியாக அடித்த அந்த கும்பல் அவர்களை கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் விழுப்புரம் மாவட்டம், வேலம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

    8 years old boy beaten to death in Villupuram

    தாயுடன் வசிக்கும் 14 வயது சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி இவர்களது வீட்டின் கதவை உடைத்த வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் விதவை பெண்ணையும் , அவரது சிறுமியையும் சரமாரியாக தாக்கியது.

    பின்னர் அங்கிருந்த 8 வயது சிறுவனை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தாயையும், சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.

    இந்நிலையில் மறுநாள் காலையில் இவர்கள் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே வராததை கண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 8 வயது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் ஆடைகளின்றி இருந்ததை அடுத்து அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் 14 சென்ட் நிலத்துக்காக இவர்களின் குடும்பத்தினருக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்ததுள்ளது தெரியவந்தது.

    சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் இதுவரை போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+