84% வாக்காளர்களின் தகவல்கள் “ரெடி” - சந்தீப் சக்சேனா தகவல்
சென்னை: தமிழகத்தில் 84 சதவீத வாக்காளர்களின் தகவல்கள் பெறப்பட்டுவிட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "வாக்குச்சாவடிகளில் கடந்த 10 ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் பெயர் திருத்தம், சேர்ப்பு உட்பட பல திருத்தங்களுக்காக 10 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழகத்தில் மொத்தமுள்ள 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களில் 4.73 கோடி வாக்காளர்களின் ஆதார் உள்ளிட்ட தகவல்களை பெற்றுவிட்டோம். 3.54 வாக்காளர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எத்தனை இடங்களில் ஆதார் குறைவாக தரப்பட்டுள்ளது போன்ற விபரங்களை மாவட்ட கலெக்டருடன் பேசி முடிவு செய்வோம். 31 ஆம் தேதியோடு வாக்காளர் தகவல் சேர்க்கும் பணி நிறைவடைகிறது. இறுதி சிறப்பு முகாம் 24 ஆம் தேதி நடக்கிறது.
பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு தனித்தனி விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஒரே விண்ணப்பமாக மாற்றுவதற்கான ஆலோசனையில் இந்திய தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications