திண்டுக்கல் அருகே ரயில் மோதி 86 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை இரயில் நிலையத்தில் ரயில் மோதியதில் 86 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
திருச்சி சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் விவசாய நிலங்களில் பட்டி அமைத்து ஆடு மேய்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பட்டியில் இருந்து வெளியேறிய செம்மறி ஆடு கூட்டம் வடமதுரை இரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த தடத்தில் வந்த ரயில் எதிர்பாரதவிதமாக ஆடுகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 86 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 5 இலட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications