9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிவஞானம் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை:
- நகராட்சி நிர்வாகம், இணை ஆணையராக எம்.ஆரிஷா மரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேளாண்துறை கூடுதல் இயக்குநராக எஸ்.செந்தாமரை பொறுப்பேற்கிறார்.
- ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- டி.ஆனந்த் கூட்டுறவு நிறுவனங்கள் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையராக ஆர்.கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
- எல்.நிர்மல் குடிநீர், கழிவு நீரகற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஏ.அண்ணாதுரை மாநகராட்சி தென்மண்டல துணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஆர்.ஆனந்தகுமார் நீர்வள ஆதார முகமை செயல் இயக்குநராக பணியமர்த்தியுள்ளது அரசு.












Click it and Unblock the Notifications