மந்திரச் சொம்பு தருவதாக கூறி.. பூஜை நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி- 9 பேர் கும்பல் கைது
தேனி: தேனியில் இரவு நேரத்தில் மந்திர சொம்பு இருப்பதாக கூறி, போலியான பூஜை நடத்தி ரூபாய் 35 லட்சம் கபளீகரம் செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்.
இவரிடம், பங்களாமேடு மற்றும் பெரிய குளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தங்களிடம் மந்திர சொம்பு மற்றும் பஞ்சாரக்கூடை இருப்பதாக கூறி யுள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி மோசடி:
அந்த சொம்பு மற்றும் கூடையை வைத்து பூஜை செய்தால் அவற்றில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கலாம் என்று கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
ஏமாந்தவர்கள் பலர்:
இதனை நம்பிய தங்கப் பாண்டியன் மற்றும் பங்களா மேடு, மதுரை பகுதிகளை சேர்ந்த பலர் பல தவணைகளாக ரூபாய் 35 லட்சம் வரை பணம் கொடுத்து உள்ளனர்.
மந்திர பூஜை:
பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் பூஜை செய்து ரூபாய் 1 கோடி பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து இந்த கும்பல் தங்களின் மந்திர பூஜையை தொடங்கி உள்ளனர்.
பூஜை மட்டும்தான் நடந்துச்சு:
தங்கப் பாண்டியன் வீட்டில் வைத்து இரவில் பூஜை செய்து உள்ளனர். அதேபோன்று பணம் அளித்த நபர்களின் வீடுகளில் சென்று இரவு நேர பூஜையை நடத்தி உள்ளனர். பூஜை செய்து கொண்டே இருந்தார்களே தவிர, கொடுத்த பணத்தையோ, தருவதாக சொன்ன இரட்டிப்பு பணத்தையோ கொடுக்க வில்லை.
போலீசில் புகார்:
இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கப்பாண்டி யன் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷி டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். இந்த நூதன மோசடி குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பத்மாவதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த 9 பேர்:
விசாரணையில், தேனி பகுதியை சேர்ந்த அங்குலட்சுமி , வசந்தா , பவள்ளியம்மாள் , மாயாண்டி , அவருடைய மனைவி லட்சுமி , ஜேம்ஸ் என்ற ஜெயக் குமார் , கணேசன், மகாலட்சுமி , வெங்கட்ராமன் ஆகிய 9 பேரும் சேர்ந்து நூதன முறையில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
போலீசார் கைது:
அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications