மீட்டருக்கு மேல் கேட்ட ஆட்டோக்கள்– ஒரு மாதத்தில் 935 ஆட்டோக்களுக்கு “சீல்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பதாக அதிக அளவிலான புகார்கள் குவிந்து வருகின்றன.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து புகார் நிலையத்திற்கு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்து குவிந்து கொண்டே உள்ளது.

935 autos sealed because of excess pair…

இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களின் மீதான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சோதனை நடக்கிறது. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் இந்த மாதம் 24 ஆம் தேதி வரை உள்ள ஒரு மாத காலத்தில் அதிக கட்டணம் வசூல், மீட்டர் போடாமல் இயங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 935 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து 3 முறை புகாரில் சிக்கினால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்களின் அனுமதி நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+