பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை முட்புதரில் கண்டெடுப்பு- போலீஸார் தீவிர விசாரணை
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே உள்ள முட்புதரில் குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்பதயறிந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, முட்புதரினுள் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமுதா என்ற பெண்ணுக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் நேற்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். மருத்துவமனையில் அளித்த தகவலில் அவரது பெயர் அமுதா, அவரது கணவர் பெயர் முரளி என்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications