மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை... ஒரே கயிறில் தூக்கில் தொங்கிய வயதான தம்பதி!
சென்னையில் மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதி ஒரே கயிறில் தூக்கில் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதி ஒரே கயிறில் தூக்கில் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிழக்கு முகப்பேரை அடுத்த பாடிபுதுநகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. 67 வயதான இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவியின் பெயர் கோதை. இந்த வயதான தம்பதி மகன்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற எண்ணத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குப்புசாமியின் மனைவி கோதைக்கு காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். குப்புசாமிக்கும் சர்க்கரை நோய் இருந்துள்ளது.

ஒரே கயிறில் தூக்கு
இருவரும் உடல் நிலை மோசமடைந்ததால் வேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகன்களுக்கு தொல்லை தரக்கூடாது என எண்ணிய அவர்கள் தாங்கள் குடியிருந்த வீட்டில் ஒரே கயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

கல்விச் செலவுக்கே போதாத நிலை
அதில் தங்களின் மகன்கள் ஈட்டும் வருமானம் அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்கே போதாத நிலையில் அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என தனியாக வசித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தாங்கள் இருவருக்கும் உடல்நிலை மோசமாகிவிட்டதால் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உருக்கமான கடிதம்
தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ள குப்புசாமி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு கொடுத்துள்ள அட்வான்ஸ் தொகையையும், தான் செக்யூரிட்டியாக பணிபுரிந்த இடத்தில் தர வேண்டிய சம்பளத்தையும் தங்களது மகன்களிடம் வழங்குமாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications