முதல்வர் திறக்கும் முன் 2 நாள் மழைக்கே கீழே இறங்கிய புது பாலம் .. அதிர்ச்சியில் மக்கள்
நாமக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருந்த பாலம் அரை அடி கீழே இறங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருந்த பாலம் அரை அடி கீழே இறங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மணிமுத்தாறின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை வரும்த 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாலம் திடீரென அரை அடி கீழே இறங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பாலத்தின் தார் இணைப்பு பகுதி அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கியுள்ளது.
2 நாள் மழைக்கே பாலம் அரை அடி இறங்கியுள்ளது. திறக்கப்படுவதற்கு முன்பே பாலம் கீழே இறங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications