நாமக்கல் அருகே பஸ் முன்பு திடீரென குறுக்கே வந்த சைக்கிள்.. சமயோஜிதமாக காப்பாற்றிய டிரைவர்.. வீடியோ
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்பட்டை அருகே சைக்கிளில் வந்தவர் திடீரென குறுக்கே புகுந்த நிலையில், அந்த நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பக்கத்து ரோட்டில் வாகனத்தை திருப்பிய ஓட்டுநர், சைக்கிளில் சென்றவரை காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமே விதிகளை மீறுவது தான். சிலர் சைடு பார்க்காமல் வாகனத்தை இயக்குவது பேராபத்தில் முடிகிறது. அதேநேரம் சிலர் குறுக்கே வந்த நபரை காப்பாற்றுவதற்காக வாகனத்தை திசைமாற்றி திருப்பும் போது, விபத்தில் இறக்க வேண்டிய நபருக்கு பதிலாக ஏராளமானோர் இறந்துவிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சைடுபார்க்காமல் வாகனத்தை சட்டென திருப்பி சிக்னலில் வளைந்து செல்வதும் அதிகரித்துள்ளது. அதுவும் பெரிய விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. இதே போல் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை சட்டென முந்தி செல்லும் போதும் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை முந்தி செல்லும் போதும் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் திறமையான செயல்பாட்டால் நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார். அந்த பேருந்து ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள் வருகிறது.
நாமக்கல் மாவட்டம் வெப்பட்டை அருகே சைக்கிளில் வந்தவர் திடீரென குறுக்கே புகுந்த நிலையில், அந்த நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பக்கத்து ரோட்டில் வாகனத்தை திருப்பிய ஓட்டுநர், சைக்களில் சென்றவரை காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலர், சைக்கிளில் வந்தவரை காப்பாற்றியதை பாராட்டினாலும், அந்த நேரத்தில் பேருந்து அல்லது வேறு ஏதேனும் வாகனங்கள் வந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஓட்டுநரின் சமயோஜிதமான செயல்பாடு காரணமாக, தவறாக வந்த சைக்கிள் ஓட்டுநர் அதிசயமாக தப்பி உள்ளார். உண்மையில், இது மிகவும் பாராட்டப்பட்ட ஓட்டுநரின் சூப்பரான முடிவு என்றார்.
https://x.com/GunasekaranMu/status/1714188628270690327?s=20











Click it and Unblock the Notifications