திருச்சியில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம்.. தினகரன் மீது மீண்டும் வழக்குப்பதிவு
திருச்சியில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் டிடிவி தினகரன் சார்பில் அவரது ஆதரவாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர். அவர்கள் அனுமதியின்றி பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து டிடிவி தினகரன் மீது திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சேலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை தினகரன் ஆதரவாளர்கள் வழங்கினர்.
இதுகுறித்து டிடிவி தினகரன் உள்ளிட்ட 36 பேர் தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருச்சியிலும் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications