நெல்லை அருகே லேப்டாப்புடன் கல்லூரி வந்த மாணவி, ஆசிரியை திட்டியதால் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கல்லூரிக்கு லேப்டாப் கொண்டு வந்ததை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள பாணான்குளத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி மகள் சுபா (18), நெல் லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் படித்த நாங்கு நேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் இவருக்கு இலவச லேப் டாப் வழங்கப்பட்டது.

A collage student commit suicide after teacher scrolls her

இந்த லேப்டாப்பை கல்லூரிக்கு எடுத்துச்சென்றுள்ளார், சுபா. அந்த கல்லூரியில் லேப்டாப் மற்றும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் லேப்டாப்பை பார்த்த, ஆசிரியை அதை பிடுங்கி வைத்துக்கொண்டு கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளார்.

சுபா வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி அழுதுள்ளார். அவரது தந்தை, எப்படியும் லேப்டாப்பை மீட்டு தருவதாக கூறியுள்ளார். ஆனாலும், மனமுடைந்த சுபா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த லேப்டாப் ரிப்பேர் ஆகியிருந்ததாகவும், அதை நெல்லையிலுள்ள எலக்ட்ரீஷியனிடம் கொடுத்து சரி செய்யவே சுபா லேப்டாப் கொண்டு சென்றிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+