கல் தட்டி காலில் ஏற்பட்ட காயத்துக்கு நாய்க்கடி ஊசி போட்ட அரசு மருத்துவர்.. சென்னையில் அலட்சியம்!
கல் தட்டி காலில் ஏற்பட்ட காயத்துக்கு அரசு மருத்துவர் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கல் தட்டியதால் காலில் ஏற்பட்ட காயத்துக்கு அரசு மருத்துவர் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் நரேஷ். 8 ஆம் வகுப்பு படித்து வரும் நரேஷ் கடந்த 10 ஆம் தேதி நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த கல் ஒன்று தட்டியதில் கால் விரலில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு சிகிச்சை எடுப்பதற்காக 11 ந்தேதி காலை நரேஷ் தனது சகோதரருடன் ராயப்பேட்டை அரசுமருத்துமனைக்கு சென்றுள்ளார்.

காயத்துக்கு நாய்க்கடி ஊசி
அங்கிருந்த மருத்துவர் காலில் உள்ள காயத்தை பார்த்துவிட்டு நாய் கடிக்கு போடும் ஊசியை எழுதி கொடுத்துள்ளார். என்ன ஊசி என்று தெரியாமலேயே 2 ஊசிகளை நரேஷ் போட்டு கெண்டுள்ளார்.

தொடர்ந்து நாய்க்கடி ஊசி
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 14 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஊசி போடவேண்டும் என்றும் அரசு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து 14ஆம் தேதி நரேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்
அப்போது அங்கு வேறொரு மருத்துவர் இருந்துள்ளார். நரேஷுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சீட்டில் நாய் கடி ஊசி என்று எழுதி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் நரேஷிடம் விசாரித்துள்ளார்.

மருத்துவர் மீது நடவடிக்கை
அப்போதுதான் தனக்கு நாய் கடி ஊசி போடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார் நரேஷ். அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எழுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஒருவர் இத்தனை அலட்சியமாக செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications