அமைச்சர் சம்பத் வீட்டிற்கு அருகே பெண்ணின் “எலும்புக்கூடு” – போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வருமான வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் எலும்புக் கூடாக கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். அவரது வீடு கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து சென்னை சாலையில் திருமலை நகரில் உள்ளது.
இந்நிலையில் அவரது வீடு அருகில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்க தக்க பெண் உடல் எலும்புக் கூடாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையா, தற்கொலையா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது நரபலியா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications