சாத்தூர் அருகே பயங்கரம்.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
சாத்தூர் அருகே கல்லூரி மாணவியை கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

விருதுநகர் மாவட்டம் சாத்துரை அடுத்த ரெட்டியாப்பட்டியை சேர்ந்தவர் பொன் மகாலட்சுமி. பொன் மகாலட்சுமி தூத்துக்குடி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மதன். இவர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி கொடூர கொலை
மதனும் பொன் மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ரெட்டியாப்பட்டியில் மாணவி பொன் மகாலட்சுமியை மதன் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை
பின்னர் வீட்டிற்கு சென்ற மதன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாணவி அஸ்வினி
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் சென்னையில் மாணவி அஸ்வினி கல்லூரி வாசலிலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications