கேரள மாநிலத்தில் இருந்து மாமிசக் கழிவு ஏற்றி வந்த லாரியை கண்டுகொள்ளதாக தமிழக போலீஸார்!
களியக்காவிளை: கேரள மாநிலத்தில் இருந்து மாமிசக் கழிவு ஏற்றிக் கொண்டு வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் தமிழக போலீஸார் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் படந்தாலுமூடு ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகள் வழியாக கோழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மனித உறுப்பு, மாமிச கழிவுகள், மீன் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன.
அவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி சென்றுகொண்டிருந்த நிலையில், பொதுமக்கள் அந்த வாகனங்களை சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க துவங்கிய நிலையில், கேரளாவில் இருந்து இந்த கழிவுகளை கொண்டுவருவது சற்று குறைந்து காணப்பட்டது.

மீண்டும் கழிவுகள்
இந்நிலையில் தற்போது கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் துர்நாற்றம் வீசும் கழிவுகளை குமரிமாவட்டத்தில் உள்ள இடைதரகர்கள் மூலம் தமிழகத்தில் கொண்டுவர துவங்கியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இந்த கழிவுகளை ஏற்றிவரும் லாரிகள் கடந்து செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அந்த கண்டெய்னர் லாரிகளை தடுத்துநிறுத்தும் போது ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிடுவது வழக்கம்.
மாற்று பாதையில் பயணம்
பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள இடைதரகர்களை வைத்து அவர்கள் மூலம் வாகனத்தை கேரளாவிற்கு அனுப்பி வைப்பதாககூறி தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதிக்கு அனுப்பிவைப்பது வழக்கம். ஆனால் அந்த இடைதரகர்கள் மீண்டும் அந்த வாகனத்தை மாற்று பாதைவழியாக குமரிமாவட்டம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர்.
போலீஸார் வரவில்லை
இதுபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழித்துறை நீதிமன்றம் முன்பு கேரளாவில் இருந்து கழிவு ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பிஓடினார். அப்போது ஊர் பொதுமக்கள் களியக்காவிளை காவல்நிலையத்தில் தகவல்தெரிவித்து ஒருமணிநேரம் ஆகியும் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வரவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச துவங்கியது.
போலீஸார் லஞ்சம்
அப்போது நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து விசாரித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் தகவல்தெரிவித்தார். இதையடுத்தே காவல்துறையினர் இடைதரகர்களுடன் சென்று லாரியை எடுத்து பாதுகாப்புடன் தமிழகத்திற்குள் அனுப்பிவைத்தனர். இதில் போலீசார் லஞ்சம் பெற்று மீண்டும் தமிழகத்திற்குள் செல்ல அனுமதித்து லாரியை விடுவித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications