Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அருகே பயங்கர சத்தம்.. ராக்கெட் லாஞ்சரை எடைக்கு போட எடுத்துச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மலைப் பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடைக்குப் போடுவதற்காக எடுத்துச் சென்று உடைத்தபோது அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஆர்பிஎப், சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய ராணுவப் படைகளில் பணிபுரிபவர்கள் இங்கு துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

chengalpattu rocket hospital

இதில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சுடப்படும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க வேண்டும். இப்படி ராக்கெட் லாஞ்சர்களை வைத்து பயிற்சி எடுக்கும்போது அதனுடைய அலுமினியம், பித்தளை போன்ற உதிரி பாகங்கள் அப்பகுதியில் சிதறி கிடக்கும்.

அந்தப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை என்பதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச்சூடு பயிற்சி முடிந்த பிறகு பொறுக்கிச் சென்று விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

நேற்று அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் (52) என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடைக்குப் போட்டு காசு வாங்குவதற்காக எடுத்துச் சென்று, தான் வைத்திருந்த கத்தியால் உடைத்தபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் கோதண்டன் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, ஒருவர் ராக்கெட் லாஞ்சரை எடுத்துக் கொண்டு சென்றபோது அது கீழே விழுந்து வெடித்ததில் அப்பகுதியில் உள்ள மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவத்திற்கு சொந்தமான பொருட்களை யாரும் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் இப்பகுதியில் உள்ள மக்களின் அறியாமையால் அவற்றை எடுத்துச் செல்வதால் அசம்பாவிதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+