வேலூரில் கத்தை கத்தையாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்.. ஒருவர் கைது
ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video

வேலூர்: வேலூரில் கத்தை கத்தையாக பழைய ரூபாய் நோட்டுக்கள் சுமார் இரண்டரை லட்சம் மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது சம்பந்தமாக ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் தெற்கு காவல்துறையினர், அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த நபரிடம் கஞ்சா பொட்டலங்களும் இருந்ததும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து பழைய நோட்டுக்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அசேன் என்ற அந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை எங்கே கொண்டு செல்லப்படுகிறார்? கஞ்சா பொட்டலங்களை எங்கிருந்து யாருக்காக கடத்தி போகிறார்? இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications