தூத்துக்குடி - சென்னை புதிய விமான சேவை நாளை முதல் தொடக்கம்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிற 20-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்க உள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் புதிய விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் கடந்த 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 14 ஆண்டுகளாக பெரிய அளவில் பயன்படாமலேயே இருந்து வந்தது. இடையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் சென்னைக்கு விமான சேவையைத் தொடங்கியது. வெற்றி பெறாததால் சில மாதங்களிலேயே நிறுத்திக் கொண்டன.

இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் 'ஸ்பைஸ்ஜெட்' தனியார் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை நாளை முதல் முதல் தொடங்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த 'ஏர் கார்னிவெல்' என்னும் தனியார் நிறுவனம் மூலம் 72 இருக்கைகள் கொண்ட சிறிய வகை விமானம் இயக்கப்பட உள்ளது.
இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மாலை 3.50 மணிக்கு வந்து சேரும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு 5.50 மணிக்கு சென்றடையும். இதனால் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications