For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”மனித நேய ஜனநாயக கட்சி” தொடங்கினார் தமீமுன் அன்சாரி- விரைவில் கூட்டணி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி புதிய கட்சி ஒன்றினைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக, மனித நேய மக்கள் கட்சியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது எனவும், தாங்கள் கூட்டவிருக்கும் பொதுக் குழுவே உண்மையான பொதுக் குழு எனவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தமீமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.

A new party inagurates by Tamimun ansary

இந்நிலையில் தமீமுன் அன்சாரி, "மனித நேய ஜனநாயக கட்சி"யை தொடங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர், கடந்த தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamimun ansary starts a new party after relive from Manithaneya makkal katchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X