குடும்பத் தகராறில் ஒன்றரை மாத குழந்தை அடித்துக்கொலை.. தூத்துக்குடி அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் ஒன்றரை மாத குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: வல்லாநாடு அருகே குடும்பத் தகராறில் ஒன்றரை மாத குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை அடுத்த பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஒன்றரை மாதத்தில் நந்தினி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராஜேஸ்வரியின் குடும்பத்துக்கும் அவரது உறவினரான வண்டிமலையான் என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்த வண்டிமலையான் வீட்டில் இருந்த ஒன்றரை மாத பெண் குழந்தையான நந்தியை தூக்கி வீசியுள்ளார்.
இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை தடுக்கச்சென்ற தாய் ராஜேஸ்வரியையும் வண்டிமலையான் கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள வண்டிமலையானை தேடி வருகின்றனர்.
குடும்பத்தகராறில் ஒன்றரை மாத குழந்தை தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications