நீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு
நீட் முடிவுகளை அறிய சென்ற சென்னை மாணவி மாயமானார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் காணாமல் போன மாணவி மீட்பு- வீடியோ
சென்னை: நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி கோடீஸ்வரி மாயமாகிவிட்டார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்.

நேற்று முன் தினம் நீட் தேர்வு வெளியான நிலையில் அதன் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார் கோடீஸ்வரி. நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.
இந்நிலையில் பெற்றோருக்கு போன் செய்த கோடீஸ்வரி தன்னை விட்டு விடுமாறு கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீஸார் மாணவியை தேடி வருகின்றனர். நீட் தேர்வுதான் காரணமா இல்லை மாணவி வேறு ஏதாவது காதல் வலையில் சிக்கியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications