ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், ஒரே சாதியில் பெற்றோர்கள் சம்மதமின்றி காதல் திருமணம் செய்வோரை எல்லாம் ஊரை விட்டுத்தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது, கொலை செய்வது போன்ற பல கொடுஞ்செயல்கள், கட்டுப்பாடுகள் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
சாதியக் கட்டுப்பாடு என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொடுமைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்தால் ஊருக்குள் நுழையக்கூடாது, அபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கொடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
கடந்த மாதம் (மார்ச் 21) கிருஷ்ணகிரியில் பகலிலேயே ஜெகன் என்ற இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
இன்று (15.04.2023) கிருஷ்ணகிரியில், ஊத்தங்கரை அருகே தண்டபானி என்பவர் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் தனது மகன் சுபாஷ் என்பவரையும், தனது தாயாரையும் வெட்டி ஆணவப்படுகொலை செய்துள்ளார். இவரது மருமகளையும் தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்த ஆணவப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதிலும், வன்கொடுமைகள் அரங்கேறுவதை தடுக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
ஆணவப்படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றவேண்டும். கிராமங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கும் சமூக விரோத சக்திகளை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற சமூகவிரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications