நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மருமகன்.. மதுரையில் அதிர்ச்சி
மதுரை அருகே நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மதுரை: நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரை மருமகனே பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ் எஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் தனது மகளை, முடக்குசாலையைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
இந்த நிலையில், சில தினங்களாக ஜோதியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் போலஸில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜோதியின் மருமகன் செல்வின் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
மாமியார் பலாத்காரம்
அதில் ஜோதியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருமகன் செல்வின், அவரது நண்பர்களான அழகரடி அருண் பொன்மேனி, முகமது ஷெரீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பலாத்காரம் செய்து படுகொலை
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாமியார் என்றும் பாராமல், ஜோதியை அவரது மருமகன் செல்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை படுகொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.
தோட்டத்தில் உடல் புதைப்பு
மேலும் புல்லூத்து பாய்ஸ் டவுன் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜோதியின் உடலை புதைத்ததும் அம்பலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜோதியின் உடல் இன்று தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட உள்ளது.
மக்கள் கூட்டம்
இந்த தகவல் பரவியதும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. மாமியாரை மருமகனே நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.