இதுதான் அந்த உயிர்க்கொல்லி சுவர்.. எப்படி நடந்தது பரங்கிமலை ரயில் விபத்து?
Recommended Video

சென்னை: பரங்கிமலையின் 4வது வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்கியதுதான் பயணிகள் அடிபட்டு உயிரிழக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.
பரங்கிமலை 4வது தண்டவாள வழித்தடத்தில், வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் செல்லும். ஆனால், நேற்று, இன்று, 4வது வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
4வது வழித்தடத்தில் தண்டவாளத்தின் மிக அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை கடற்கரை-திருமால்பூர் மின்சார ரயில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தபோது, இந்த தடுப்பு சுவரில், மோதிதான், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த, பயணிகள் அடிபட்டு கீழே விழுந்துள்ளனர்.

கோர விபத்து
இதில், தலை நசுங்கியும், உடல் நசுங்கியும் ரத்த வெள்ளத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இரவும் இதேபோன்ற ஒரு விபத்து நடந்ததாகவும், அதில் 2 பேர் பலியானதாகவும், ரயில் பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

குறைந்த வேகம்
பயணிகள் தொங்கி கொண்டு பயணித்தபோது, ரயிலை குறைந்த வேகத்தில் இயக்கியிருக்க வேண்டும். அல்லது, தடுப்பு சுவர் இருக்கும் தகவலை பயணிகளுக்கு தெரிவித்து எச்சரித்திருக்க வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.

கொலைகார சுவர்
மெட்ராஸ் என்ற திரைப்படத்தில், ஒரு சுவர் பலரையும் பலி எடுப்பதாக உருவகப்படுத்தியிருப்பார்கள். பரங்கிமலை ரயில் நிலையத்திலும் கொலைகார சுவராக மாறியுள்ளது, அந்த தடுப்பு சுவர்.

கூட்டம் அதிகம்
இந்த சுவர் பல வருடங்களாக இருப்பதாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மேலும், சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை இந்த தண்டவாளத்தில் ரயிலையே இயக்க மாட்டோம், எனவும் அவர் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications