For Daily Alerts
Just In
திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை.. சட்டசபை ஊழியர் மயக்கம்... ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார்!
சட்டசபையில் திமுக நடத்திய ரகளையால் சட்டசபை ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தார்.
சென்னை: சட்டசபையில் இன்று அரங்கேறிய ரகளையில் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சட்டசபையில் திமுகவினர் இன்று பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சட்டசபை ஊழியரான பாலாஜி என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்.
An injured official being taken to hospital following massive ruckus in the assembly #floortest #TamilNadu pic.twitter.com/bzBSO1eGaZ
— ANI (@ANI_news) February 18, 2017
இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்தக்கொதிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை ஊழியர் ஒருவர் மயக்கமடைந்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary
A worker fainted in assembly due to the uproar of DMK MLAs. He has taken to the hospital by Ambulance.
Story first published: Saturday, February 18, 2017, 13:00 [IST]