கூலி தொழிலாளி படுகொலை… போலீசார் உடையில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயலால் நெல்லையில் பதற்றம்
நெல்லை அருகே தொழிலாளி வெட்டி கொல்லப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகேகூலித்தொழிலாளியை போலீசார் உடையில் வந்து கொலைசெய்து விட்டு தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸார் எல்லைக்குள் உள்ள மஞ்சன்குளத்தை சேர்ந்தவர் கேந்திரபால். இவர்இப்பகுதியில் தங்கிகூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் சம்பவம் நடைபெற்ற அன்று மாலை தனது வீட்டில் வேலைக்கு செல்லாமல் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது போலீஸ் உடையில் வீட்டுக்குள் புகுந்த ஒருவர் அவரை தட்டி எழுப்பி, வீட்டு வாசலில் உயரதிகாரி நிற்பதாகவும் கேந்திரபாலை விசாரணைக்கு அழைப்பதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு திடுக்கிட்ட கேந்திரபால், வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சராமரியாக வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியது. சத்தம் கேட்டு அங்கு வந்த மக்கள், இந்த கொலையை கண்டுசெய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
சம்பவம் குறித்து கேள்விபட்டதும் போலீஸ் உயரதிகாரிகள் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை பழிக்கு பழியாக நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொலை சம்பவம் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications