சென்னை தி. நகரில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - பட்டப்பகலில் பயங்கரம்
சென்னை தி. நகரில் இளம்பெண்ணை கத்தியில் குத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை: சென்னை தியாகராய நகரில் வனிதா என்ற இளம்பெண்ணை கத்தியில் குத்திவிட்டு தப்பியோடிய ரகுநாத் என்ற வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பழி தீர்க்கவே, வனிதாவை, ரகுநாத் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் வனிதா, தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இன்று காலையில் அலுவலவகம் செய்வதற்காக தியாகராய நகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் வனிதா நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்தப்பக்கமாக வந்த வாலிபர், வனிதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த வனிதா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கத்தியால் குத்திய நபரின் பெயர் ரகுநாத் என்பது தெரிய வந்தது. தனியார் நிறுவனத்தில் இரண்டுபேரும் வேலை செய்தபோது பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாகவே, வனிதாவை, ரகுநாத் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. ரகுநாத்தை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சமீபகாலமாக சென்னையில் இளம் பெண்கள் ஒருதலைக்காதலால் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளான நிலையில் தற்போது முன்விரோதம் பழிக்குப் பழியாக இளம்பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications