ஆவின் பால்கோவா இலவச டோர் டெலிவரி வேண்டுமா?.. உடனே போனைப் போடுங்க!
கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் “இல்லம் தேடி வரும் ஆவின்” என்ற சேவையின் மூலம் ஆவின் பொருட்களின் டோர் டெலிவரி விற்பனையை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
சென்னை: கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் "இல்லம் தேடி வரும் ஆவின்" என்ற சேவையின் மூலம் ஆவின் பொருட்களின் டோர் டெலிவரி விற்பனையை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால், பால் பொருள்களான நெய், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், ஐஸ்கிரீம்கள், மில்க் பேடா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் ஆவின் பாலகம், ஹைடெக் பாலகம், சில்லரை பால் விற்பனையாளர்கள் மற்றும் மொத்த பால் விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படுவதால் மாதத்துக்கு ரூ. 18 கோடி லாபம் கிடைக்கிறது.
அரை கிலோ மற்றும் ஒரு கிலோ அளவிலான பால்பவுடர் தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 3 ஆயிரத்து 500 கிலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இல்லம் தேடி வரும் ஆவின் என்ற திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பால் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்.