கனவு மட்டும் கூடாது.. கடின உழைப்பும் வேண்டும்.. இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

திருச்சி : கனவு காண்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், கடின முயற்சியும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் வெற்றியடையலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வேளாண் கருத்தரங்கிலும், அதைத் தொடர்ந்து அரியலூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கினார். நேற்று காலை அறையை விட்டு அப்துல்கலாம் வெளியே வந்தார். அப்போது அவருக்கு அங்கு நின்ற சிறுவர்கள், பொதுமக்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறினர். அவர் பதிலுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

abdul kalam

அவரோடு சிறுவர்களும், பொதுமக்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அப்போது அப்துல் கலாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது..,

இளைஞர்கள் கனவு மட்டும் காண்பதோடு இல்லாமல் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். கடின உழைப்பு இருக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு அஞ்சக்கூடாது. இந்த மூன்றும் இருந்தால் இளைஞர்களுக்கு வாழ்வில் அனைத்தும் வெற்றி தான்'' என்றார்.

அதன்பின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடந்த தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அப்துல்கலாம் காரில் புறப்பட்டு சென்றார்.

அதைத் தொடர்ந்து மதுரை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அப்துல்கலாம் மீண்டும் திருச்சி வந்து, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+