”குருவையே அழவைத்த சிஷ்யன்”- கலாம் மறைவால் மனமுடைந்து கதறிய ஆசிரியர் சின்னதுரை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மனம்கவர்ந்த ஆசிரியரான சின்னதுரை அவர்கள் தன்னுடைய மாணவரின் மறைவால் மனமுடைந்துள்ளார்.

திருச்சியில் புனித ஜோசப் கிருஸ்தவ கல்லூரியில் அப்துல்கலாம் இயற்பியல் படித்தபோது பேராசிரியராக இருந்தவர் சின்னதுரை. தற்பொழுது சின்னதுரைக்கு 93வயது ஆகிறது.

Do like our partner page.. "Dr. Kalam says" :)

Posted by Dr. APJ Abdul Kalam on Sunday, July 26, 2015

அவர் ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் பெஸ்கி இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை தினத்தன்று தனது குருநாதரான சின்னத்துரையை பார்க்க திண்டுக்கல் வந்தார் கலாம். குருவை சந்தித்து சால்வை அணிவித்துவிட்டு, 20 நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு சென்றார்.

திண்டுக்கல் வரும்போதெல்லாம் கலாம் சின்னத்துரையிடம் ஆசி பெற தவறியதில்லை. நேற்று கலாம் இறந்ததை கேட்டு ஆசிரியர் சின்னத்துரை மனமுருக கண்ணீர் சிந்தினார். அவரது ஆன்மா சாந்தி அடைய சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+