வேட்பாளரை அறிவித்தது முஸ்லீம் லீக்: வேலூரில் அப்துல் ரஹ்மான் எம்.பி. மீண்டும் போட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேலூர் தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் எம்.பி.யை அறிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. திமுக முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கியது.
இதையடுத்து வேலூர் தொகுதியில் அப்துல் ரஹ்மான் எம்.பி. மீண்டும் போட்டியிடுவார் என்று முஸ்லீம் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் செங்குட்டுவன் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜகவும் வேட்பாளரை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி வேலூர்.
அப்துல் ரகுமான் ஏற்கனவே வேலூர் எம்.பி.யாக உள்ளார். இதனால் அவர் உள்ளூர் பிரச்சனைகள், முக்கிய பிரமுகர்கள், மக்களை தெரிந்து வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.