மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி
சந்திக்க சென்ற உறவினர் ஒருவரிடம் தனது குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார் குன்றத்தூர் அபிராமி.
Recommended Video

சென்னை: சந்திக்க சென்ற உறவினர் ஒருவரிடம் தனது குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார் குன்றத்தூர் அபிராமி.
கள்ளக்காதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளை துள்ள துடிக்க கொன்றுவிட்டு தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் குன்றத்தூர் அபிராமி.
அபிராமி சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அவரது கணவர் விஜயகுமாரோ அல்லது அபிராமியின் பெற்றோரோ சென்று சந்திக்கவில்லை.
[ஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க!]

தந்தை திட்டவட்டம்
அபிராமி மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார், அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும், அவருக்காக ஜாமீன் கோரப்போவதில்லை என அபிராமியின் தந்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மனஉளைச்சல்
குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு, உறவுகள் ஒதுக்கியதால் ஏற்பட்ட இறுக்கம் என கடும் மன உளைச்சலில் உள்ளார் அபிராமி. இதன்காரணமாக சிறையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது.

சிறைத்துறை மறுப்பு
ஆனால் அபிராமி தற்கொலை முயற்சிக்கவில்லை சிறைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக வெளியாள தகவல் பொய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உறவுக்காரர் சந்திப்பு
இந்நிலையில் முதல் முறையாக அபிராமியின் உறவுக்காரர் ஒருவர் மனு மூலம் அவரை சிறையில் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளார் அபிராமி.

மன்னிப்பே கிடையாது
என் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது. மன்னிக்க முடியாத தவறு செய்து விட்டேன்.

போட்டோக்களை கொண்டு வாருங்கள்
என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும். அடுத்த முறை வரும்போது என் குழந்தைகளின் போட்டோக்களை கொண்டு வாருங்கள் என அந்த உறவினரிடம் கூறி கதறியுள்ளார் அபிராமி.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications