30ஆம் தேதியே இறந்த மகள்... விஷம் கொடுத்தும் மகன் சாகாததால் கழுத்தை நெரித்த கொடூர அபிராமி
Recommended Video

சென்னை: விஷம் கலந்த பாலை குடித்துவிட்டு 30 -ஆம் தேதி கார்னிகா இறந்துள்ளார். விஷம் கொடுத்தும் மகன் சாகாததால் கழுத்தை நெரித்து அபிராமி கொன்றுவிட்டார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.

மூன்று பேரை கொல்ல சதி
இந்நிலையில் அவர் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிவித்தார். இதுகுறித்து அபிராமி கூறுகையில் கடந்த 30-ஆம் தேதியே மூன்று பேரையும் கொல்ல திட்டமிட்டேன்.

சுந்தரத்துடன் தப்ப
இந்நிலையில் அன்று இரவு 3 பேருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். மறுநாள் அனைவரும் இறந்து கிடப்பர், நாம் சுந்தரத்துடன் தப்பி எங்காவது சென்றுவிடலாம் என்றிருந்தேன்.

தடுத்தேன்
ஆனால் மருந்தின் வீரியம் குறைவாக இருந்ததால் மறுநாள் 31-ஆம் தேதி காலை விஜய்யும் மகன் அஜய்யும் எழுந்துவிட்டனர். ஆனால் கார்னிகா மட்டும் எழவில்லை. அவளை தொட்டு பார்த்தபோது அவள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது வழக்கம்போல் அலுவலகத்துக்கு கிளம்பிய விஜய், கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்க சென்றபோது அவரை தடுத்தேன்.

கழுத்தை நெரித்த அபிராமி
31-ஆம் தேதி காலை விஜய் அலுவலகத்துக்கு சென்றவுடன் மகன் அஜய்க்கு மீண்டும் விஷம் கலந்து பாலை கொடுத்தேன். ஆனால் அவன் அதை குடித்துவிட்டு மயங்கினான். பின்னர் நீண்ட நேரமாக மயக்கத்திலேயே இருந்ததால் நானாகவே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications