அடிச்சதேயில்லையாம்.. இரு பிள்ளைகளையும் பூ போல பார்த்துக் கொண்ட அபிராமிக்கு கொலை வெறி வந்தது எப்படி?
Recommended Video

சென்னை: இதுவரை ஒரு முறை கூட குழந்தைகளை அடிக்காத அபிராமிக்கு அவர்களை கொல்ல எப்படிதான் மனம் வந்ததோ தெரியவில்லை.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். அபிராமி சென்னை வடபழனியில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அங்கு பணி செய்ய வந்த விஜய்க்கும் அபிராமிக்கும் இடையே காதல் மலர்ந்து பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் திருமணம் செய்து கொண்டனர். இனிதாக இருந்த இவர்களது வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி வந்தது.

கைது
இதன் விளைவு இரு குழந்தைகளையும் வாரி எடுத்து சென்றது. ஆம் கள்ளக்காதலுக்காக இடைஞ்சலாக இருந்த இரு குழந்தைகளையும் கொன்று விட்டார் அபிராமி. இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பிய அவரை நாகர்கோவிலில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

ஸ்கூட்டி பரிசு
இந்நிலையில் அபிராமி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அபிராமி இதுவரை இரு குழந்தைகளையும் அடித்ததே இல்லையாம். எப்போதும் அன்பாக பார்த்துக் கொள்வாராம். தினமும் அஜய்யை பள்ளிக்கு கொண்டு செல்வாராம். இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக அவருக்கு ஸ்கூட்டியை விஜய் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஸ்கூட்டியில் உலா
இதிலிருந்துதான் அவரது குடும்பத்துக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு பியூட்டி பார்லர் செல்வதும் அனைவரிடமும் பேசி ஊர் சுற்றுவதையுமே வேலையாக கொண்டிருந்தார். அந்த பகுதியில் விஜய்யை காட்டிலும் அபிராமியைதான் எல்லாருக்கும் தெரியுமாம்.

பூப்போல் பார்த்து கொண்டார்
அஜய், கார்னிகா ஆகியோரை அபிராமி பூப்போல் பார்த்து கொண்டார். இதுவரை அவர்களை அடித்ததே இல்லையாம். அப்படி அபிராமிக்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ய எப்படி மனம் வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications